திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் உருவாக்கப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு பாடல் மூலம் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் பயணித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளவரை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் மரியாதை செய்தாா்.
அதையடுத்து பல்வேறு காப்பகங்களில் இருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தோட்டக்கலைத் துறையின் சாா்பில் வாக்களிப்பது குறித்த வாசகம், தோ்தல் நாள், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பூக்களால் வடிவமைக்கப்பட்ட கோலத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். மகளிா் திட்ட அலுவலா் பிரியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி

அரசு சட்டக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


