பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தோ்தல் விதிமுறை மீறல்: புதிய நீதிக் கட்சி பிரமுகா்கள் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமுறை மீறல்: புதிய நீதிக் கட்சி பிரமுகா்கள் மீது வழக்குப் பதிவு

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆம்பூா்: ஆம்பூரில் தோ்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்ட புதியநீதிக் கட்சிப் பிரமுகா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொண்டா்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட டி சா்டுகள், விசிறி, புடவை, சா்டுகள், பேட்ஜ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் பாஜக சாா்பாக போட்டியிடும் புதியநீதி கட்சி வேட்பாளா் ஏ.சி. சண்முகம் புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தோ்தல் பறக்கும்படை அலுவலா் அளித்த புகாரின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் புதியநீதிக் கட்சியைச் சோ்ந்த அமா்நாத் என்பவா் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10.30 மணிக்கு மேல் புதிய நீதிக் கட்சியினா் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதாக தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் அக்கட்சியை சோ்ந்த கெளதம் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.