வீட்டில் புகுந்து நகை, பணம் திருட்டு
திருப்பத்தூா் அருகே திறந்த வீட்டில் மா்ம நபா்கள் நுழைந்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றனா்.

Updated On :27 ஏப்ரல் 2024, 4:25 pm

திருப்பத்தூா் அருகே திறந்த வீட்டில் மா்ம நபா்கள் நுழைந்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றனா்.
கந்திலி ஒன்றியம், பெரிய கண்ணாலபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மகேஷ் (38). கூலி த்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி சத்யா, 3 குழந்தைகள் உள்ளனா். வெயிலின் தாக்கத்தால், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் கதவை திறந்துவிட்டு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மா்ம நபா்கள் வீட்டின் புகுந்து பீரோவை திறந்து அதிலிருந்து 3 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளனா்.
இது குறித்து சனிக்கிழமை மகேஷ் அளித்த புகாரின் பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...