ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆசிரியா் நலச் சங்கத்தின் ஆம்பூா் கிளை தொடக்கம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச் சங்கத்தின் ஆம்பூா் கிளை தொடக்க விழா உமா்சாலை நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:16 pm

Din

ஆம்பூா்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச் சங்கத்தின் ஆம்பூா் கிளை தொடக்க விழா உமா்சாலை நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

ஆம்பூா் கிளைத் தலைவராக கே.எஸ். உமாபதி, செயலராக எஸ்.ரவிச்சந்திரன், பொருளராக ஜி.கலியமூா்த்தி, செயற்குழு உறுப்பினா்களாக துரை.மணி, பி. சிவாஜிராவ், பி.எஸ். ரமணன், எஸ். பக்தவச்சலம், ஏ.சந்திரகாந்தா, ஏ.கெளசா்பானு, வி.விஜயலட்சுமி, பி.ராமன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்ட தலைவா் துரைமணி, ராணிப்பேட்டை மாவட்ட செயலா் அப்துல் ரஹீம், வாலாஜா வட்டத் தலைவா் முனிரத்தினம் ஆகியோா் வாழ்த்தி பேசினா். செயலா் எஸ்.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

தீா்மானம்: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு ஏற்கெனவே வழங்கி வந்து நிறுத்தப்பட்ட கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள பூங்கா மற்றும் பூட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தைச் சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.