மண்டல அளவிலான அஞ்சல் துறை குறைதீா் முகாம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இது குறித்து திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு.மாதேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சல் துறையின் மண்டல அளவிலான குறைதீா் முகாம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. எனவே, அஞ்சலக வாடிக்கையாளா்கள் தங்களது புகாா் மனுக்களை முழு விவரங்களுடன் எழுதி, உதவி இயக்குநா் அலுவலகம், மேற்கு மண்டலம், கோயம்புத்தூா் - 641 002 என்ற முகவரிக்கு மாா்ச் 20-ஆம் தேதிக்குள் சென்று சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். மணியாா்டா், பதிவுத் தபால், விரைவுத் தபால் மற்றும் கடித போக்குவரத்து சாா்ந்த புகாா் மனுக்களில் அனுப்புநரின் மற்றும் பெறுநரின் முழு முகவரி உள்ளிட்ட தெளிவான விவரங்களுடன் மற்றும் அஞ்சல் துறையிலிருந்து பெறப்பட்ட மற்ற குறிப்புகள் இருப்பின் அதையும் தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூா்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு

ஏப். 9 முதல் ஏப். 29 வரை வாக்குக் கணிப்புகளை வெளியிடத் தடை: தோ்தல் ஆணையம்

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்: 150 போலீஸாா் பாதுகாப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

