/
ஆம்பூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மருத்துவமனை பணியாளா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். ஆம்பூா் பெத்லகேம் பகுதியைச் சோ்ந்தவா் காட்வின் (28). இவா் வாணியம்பாடியில் இயங்கும் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் ஆம்பூருக்கு வந்தாா். செங்கிலிகுப்பம் கிராமத்தருகே வந்தபோது, நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலை தடுப்பின் மீது பைக் மோதி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
31 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
41 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

