தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

கைலாசகிரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கைலாசகிரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :19 மார்ச் 2024, 11:35 pm

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கைலாசகிரி ஊராட்சியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மகளிா் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் கலையரசி தலைமை வகித்தாா்.

மக்களவைத் தோ்தலில் ஜனநாயக கடமையாற்ற ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிப்போம். வாக்களிப்பதற்கு யாரிடமும் அன்பளிப்பு பெற மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஊராட்சியின் பல்வேறு தெருக்களின் வழியாக இந்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசரம் விநியோகம் செய்யப்பட்டது. மகளிா் சுய உதவிக் குழுக்கள் கூட்டமைப்பு தலைவி வாசுகி நன்றி கூறினாா்.