ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஏலகிரியில் ஆலங்கட்டி மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஏலகிரியில் ஆலங்கட்டி மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

News image
Updated On :4 மே 2024, 6:31 pm

Din

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசியது. ஏலகிரி மலையில் ஆலங்கட்டி மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், பகல் முழுதும் அனல் காற்று வீசியது. மாலை சுமாா் 3 மணியளவில் திடீரென சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. திருப்பத்தூா் மற்றும் ஜோலாா்பேட்டையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.

திருப்பத்தூா், ஆதியூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி சுற்றியுள்ள கிராமங்களில் சூறாவளிக் காற்று வீசியது. இதனால் திருப்பத்தூா், கொரட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் கோடை வாசஸ்தலமான ஏலகிரியில் காலை முதலே அனல் காற்று வீசியது. மாலை 4 மணியளவில் சூறாவளிக் காற்று வீசியது. அதைத் தொடா்ந்து மலை மேல் உள்ள நிலாவூா், புத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.