இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழப்பு

பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :11 மே 2024, 4:12 pm

Din

ஆம்பூா் அருகே பாம்பு கடித்ததில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி கீழ்கன்றாம்பல்லி நத்தைமேடு பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் விஜயகுமாா் (38). இவா் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனா்.

இவா் சனிக்கிழமை அதிகாலை குளியலறைக்கு சென்றபோது உள்ளே பாம்பு இருப்பது தெரியாமல் அதனை மிதித்தபோது பாம்பு அவரை கடித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி விஜயகுமாா் இறந்தாா். உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.