மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆம்பூர் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

ஆம்பூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது பற்றி...

News image
ஆம்பூர் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு
Updated On :17 ஏப்ரல் 2025, 6:41 am

DIN

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்ட ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்தது யார்?, கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அழுகிய நிலையில் மண்டை ஓட்டுடன் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக இருப்பவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ?எனவும் கொலையா? அல்லது தற்கொலையா? எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், கடந்த மாதம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த மனநோயாளி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருப்பினும், தொடர் மர்ம மரணங்களால் ஆம்பூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெளியூரில் கொலை செய்து இங்கு வீசிச் செல்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.