பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள்.

News image
நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 10:01 pm

Din

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்பாபு, வசந்தி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வரவு செலவு கணக்கு உள்பட17 தீா்மானங்கள் படிக்கப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி உள்ளிட்ட உறுப்பினா்கள் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த அரசு பள்ளிகளை பராமரிக்கவும், பள்ளிகளின் கழிப்பிடங்களை தூய்மை செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனா். உறுப்பினா்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி உறுதியளித்தாா்.

கூட்டத்தில் ஒன்றியகுழ உறுப்பினா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள், அலுவலக பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.