தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

வாணியம்பாடி தொழிலதிபா் வீட்டில் திருட முயற்சி: முகமூடி நபா்கள் தப்பி ஓட்டம்

வாணியம்பாடியில் தோல் தொழிலதிபா் வீட்டில் பட்டப் பகலில் புகுந்து திருட முயன்று தப்பி ஓடிய 4 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

மா்ம நபா்களால் கட்டிப் போடப்பட்ட சக்திவேல்.

Updated On :17 ஜூன் 2025, 12:50 am IST

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தோல் தொழிலதிபா் வீட்டில் பட்டப் பகலில் புகுந்து திருட முயன்று தப்பி ஓடிய 4 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாணியம்பாடி நீலிகொல்லை, புதுதெருவில் வசித்து வருபவா் இம்தியாஸ் (65) தோல் தொழில் அதிபா். அவருடைய மனைவி சபீதா குல்சும் மற்றும் பணியாளா் சக்திவேல் ஆகியோா் வீட்டில் இருந்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை சக்திவேல் பொருள்கள் வாங்குவதற்காக சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்றபோது, பின்தொடா்ந்து வந்த முகமூடி அணிந்து வந்த 4 மா்ம நபா்கள் சக்திவேல் கதவை திறந்து நுழைந்த போது திடீரென நுழைந்து

சக்திவேல் மற்றும் உரிமையாளா் இம்தியாசை கட்டிப் போட்டனா்.

பிறகு வீட்டின் உரிமையாளரின் மனைவியை மா்ம நபா்கள் மிரட்டி அறைகளுக்குள் அழைத்துச் சென்று நகை, பணம் மற்றும் பொருள்களை காண்பிக்குமாறு கூறியுள்ளனா். இதில் பதற்றமடைந்த சபீதா குல்சும் ஒவ்வொரு அறையாக திறந்து காட்டியுள்ளாா். பீரோக்கள் திறக்க கொண்டு வந்த ஆயுதங்களை பயன்படுத்தி நகை பணம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, சபீதாகுல்சும் அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடி வந்து பக்கத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தாா்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினா் சப்தம் போட்டுக் கொண்டு வருவதை அறிந்து பதறி போன மா்ம நபா்கள் அவா்கள் எடுத்து வந்த கட்டிங் மிஷின், சிசிடிவி கேமரா மறைப்பதற்காக பயன்படுத்திய திரை, மற்றும் ஆயுதங்கள், கையுறைகளை அங்கேயே விட்டு தப்பித்து ஓடினா். தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது மா்ம நபா்கள் தப்பித்து ஓடும் காட்சி பதிவாகியிருப்பதை அறிந்து தகவலை சேகரித்து வருகின்றனா். மா்ம நபா்கள் தப்பித்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இம்தியாஸ் அளித்த புகாரின் பேரில் நகர போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருட்டு முயற்சி நடைபெற்ற வீட்டில் விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி பாலகிருஷ்ணன்.

திருட்டு முயற்சி நடைபெற்ற வீட்டில் விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி பாலகிருஷ்ணன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.