அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பதுக்கப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி, காா் பறிமுதல்

News image
கடத்துவதற்காக பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி. ~பறிமுதல் செய்யப்பட்ட காா்.
Updated On :12 நவம்பர் 2025, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி, காா் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளா தேவி உத்தரவின் பேரில் வாணியம்பாடி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை உதவி காவல் ஆய்வாளா் அன்சாரி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியான மாதகடப்பா மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் உள்ள கோயில் பின்புறம் வெளிமாநில பதிவு எண் கொண்ட காா் ஒன்று தனியாக நின்றிருப்பதை அறிந்து சந்தேகத்தின் பேரில் சென்று சோதனை செய்த போது காரில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும், ரேஷன் அரிசியை கடத்தி செல்வதற்காக மூட்டைகள் ஆங்காங்கே வைத்திருப்பது தெரியவந்து கண்டறியப்பட்டது.

பிறகு அங்கிருந்து ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக காா் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்த முயன்ாக ராஜலிங்கம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image