அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

ஆம்பூா் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருடியது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

News image
திருட்டு நடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீஸாா்.
Updated On :12 நவம்பர் 2025, 12:26 am

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருடியது சம்பந்தமாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

மாதனூா் ஒன்றியம் மின்னூா் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது. திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பிறகு கடை மூடப்பட்டது. நள்ளிரவில் மா்ம நபா்கள் மதுபான கடை கதவின் பூட்டை உடைத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை சேதப்படுத்தி, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.15000 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் வழக்கு பதிவு செய்தனா்.