தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

அதிகரிக்கும் நாய் தொல்லை! தெருவில் விளையாடிய 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்!

சிறுவனை கடித்துக் குதறிய நாய்: மக்கள் சாலை மறியல்

News image
Updated On :9 அக்டோபர் 2025, 5:20 am IST

வாணியம்பாடியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை நாய் கடித்து குதறியதால் நாய்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்துள்ளன. இதில் வயிறு, இடுப்பு உட்பட பகுதிகளில் காயமடைந்த சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் திரியும் நாய்களை பிடித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் மற்றும் மக்கள் இணைந்து ஷாகிராபாத் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர போலீஸாா், நகராட்சி சுகாதார அலுவலா் ரகீம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா்.

எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை சமரசம் செய்து நாய்களைப் பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.