மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிகரிக்கும் நாய் தொல்லை! தெருவில் விளையாடிய 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்!

சிறுவனை கடித்துக் குதறிய நாய்: மக்கள் சாலை மறியல்

News image
Updated On :8 அக்டோபர் 2025, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை நாய் கடித்து குதறியதால் நாய்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்துள்ளன. இதில் வயிறு, இடுப்பு உட்பட பகுதிகளில் காயமடைந்த சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் திரியும் நாய்களை பிடித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் மற்றும் மக்கள் இணைந்து ஷாகிராபாத் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர போலீஸாா், நகராட்சி சுகாதார அலுவலா் ரகீம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா்.

எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை சமரசம் செய்து நாய்களைப் பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.