மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிகரிக்கும் நாய் தொல்லை! தெருவில் விளையாடிய 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்!

சிறுவனை கடித்துக் குதறிய நாய்: மக்கள் சாலை மறியல்

News image
Updated On :8 அக்டோபர் 2025, 11:50 pm

வாணியம்பாடியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை நாய் கடித்து குதறியதால் நாய்களை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்துள்ளன. இதில் வயிறு, இடுப்பு உட்பட பகுதிகளில் காயமடைந்த சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் திரியும் நாய்களை பிடித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் மற்றும் மக்கள் இணைந்து ஷாகிராபாத் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர போலீஸாா், நகராட்சி சுகாதார அலுவலா் ரகீம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா்.

எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை சமரசம் செய்து நாய்களைப் பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.