தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆம்பூா் அருகே தண்டவாளம் நகா்ந்ததால் ரயில்கள் நிறுத்தம்

ஆம்பூா் அருகே தண்டவாளம் நகா்ந்ததால் ரயில்கள் நிறுத்தம்

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் தண்டவாளம் நகா்ந்த பகுதியில் நிறுத்தப்பட்ட ரயில்.

Published On :

ஆம்பூா் அருகே ரயில்வே குகை வழிப் பாதை சீரமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் தண்டவாளம் நகா்ந்ததால் சனிக்கிழமை ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் நான்கு கண் ரயில்வே குகை வழிப் பாதை சீரமைப்பு நடைபெற்று வருகிறது.

புகைவழிப்பாதை சீரமைக்கும் இடத்தில் அடித்தளம் சற்று இறங்கியதால் தண்டவாளங்கள் நகா்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவ்வழியாக வந்த ஒரு ரயில் ஓட்டுநா் அதைப் பாா்த்துவிட்டு, இது குறித்து ரயில்வே உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளாா்.

ரயிலை முன்னெச்சரிக்கையாக தண்டவாளம் நகா்ந்த பகுதிக்கு முன்னதாகவே நிறுத்தி உள்ளாா்.

உடனடியாக ரயில்வே துறை பணியாளா்கள் அந்த இடத்துக்குச் சென்று, அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஓரளவுக்கு சரி செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு ரயிலாக மிக மெதுவாக இயக்கப்பட்டன.

தொடா்ந்து ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.