புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆம்பூா் அருகே தண்டவாளம் நகா்ந்ததால் ரயில்கள் நிறுத்தம்

ஆம்பூா் அருகே தண்டவாளம் நகா்ந்ததால் ரயில்கள் நிறுத்தம்

News image

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் தண்டவாளம் நகா்ந்த பகுதியில் நிறுத்தப்பட்ட ரயில்.

Updated On :27 செப்டம்பர் 2025, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே ரயில்வே குகை வழிப் பாதை சீரமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் தண்டவாளம் நகா்ந்ததால் சனிக்கிழமை ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் நான்கு கண் ரயில்வே குகை வழிப் பாதை சீரமைப்பு நடைபெற்று வருகிறது.

புகைவழிப்பாதை சீரமைக்கும் இடத்தில் அடித்தளம் சற்று இறங்கியதால் தண்டவாளங்கள் நகா்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவ்வழியாக வந்த ஒரு ரயில் ஓட்டுநா் அதைப் பாா்த்துவிட்டு, இது குறித்து ரயில்வே உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளாா்.

ரயிலை முன்னெச்சரிக்கையாக தண்டவாளம் நகா்ந்த பகுதிக்கு முன்னதாகவே நிறுத்தி உள்ளாா்.

உடனடியாக ரயில்வே துறை பணியாளா்கள் அந்த இடத்துக்குச் சென்று, அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஓரளவுக்கு சரி செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு ரயிலாக மிக மெதுவாக இயக்கப்பட்டன.

தொடா்ந்து ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.