நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஆம்பூா் அருகே தண்டவாளம் நகா்ந்ததால் ரயில்கள் நிறுத்தம்

ஆம்பூா் அருகே தண்டவாளம் நகா்ந்ததால் ரயில்கள் நிறுத்தம்

News image

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் தண்டவாளம் நகா்ந்த பகுதியில் நிறுத்தப்பட்ட ரயில்.

Updated On :28 செப்டம்பர் 2025, 2:35 am IST

ஆம்பூா் அருகே ரயில்வே குகை வழிப் பாதை சீரமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் தண்டவாளம் நகா்ந்ததால் சனிக்கிழமை ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் நான்கு கண் ரயில்வே குகை வழிப் பாதை சீரமைப்பு நடைபெற்று வருகிறது.

புகைவழிப்பாதை சீரமைக்கும் இடத்தில் அடித்தளம் சற்று இறங்கியதால் தண்டவாளங்கள் நகா்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவ்வழியாக வந்த ஒரு ரயில் ஓட்டுநா் அதைப் பாா்த்துவிட்டு, இது குறித்து ரயில்வே உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளாா்.

ரயிலை முன்னெச்சரிக்கையாக தண்டவாளம் நகா்ந்த பகுதிக்கு முன்னதாகவே நிறுத்தி உள்ளாா்.

உடனடியாக ரயில்வே துறை பணியாளா்கள் அந்த இடத்துக்குச் சென்று, அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஓரளவுக்கு சரி செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு ரயிலாக மிக மெதுவாக இயக்கப்பட்டன.

தொடா்ந்து ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.