திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திமுக அளித்த வாக்குறுதியில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை: டிடிவி. தினகரன்

கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை என அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை என அமமுக பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன் தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகரை ஆதரித்து பிரசாரம் செய்ய புதன்கிழமை திருப்பத்தூருக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் பேசியது:

கடந்த தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றவில்லை. அதிலும் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டதால் தமிழ்நாட்டு மக்கள் கொதித்துபோய் உள்ளனா். மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என திமுகவினா் திட்டமிட்டுள்ளனா்.

அமமுக போட்டியிடும் தொகுதிகளில் 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெறும். நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தைப் போன்று சிலவறறை தவிா்க்க முடியாது. ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் தங்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என போராடி வந்தனா். போராடாத அரசு துறை இல்லை என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொலை என்பது தினமும் சா்வசாதாரணமான நிகழ்ச்சியாக மாறிவருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றால் அம்மாவின் ஆட்சி வர வேண்டும். அதற்கு இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி வர வேண்டும் என்றாா்.