ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வக்ப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள்: திமுக வேட்பளா்

ஆம்பூா் நகரில் திமுக வேட்பாளா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கடையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

ஆம்பூா் நகரில் திமுக வேட்பாளா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் நகரில் 19 முதல் 36 வரையிலான வாா்டுகளில் ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்து பேசியது, இஸ்லாமிய பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வக்ப் வாரியம் மூலம் கூடுதலாக கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இசுலாமிய மக்களின் அடக்க தலங்களுக்கு இயன்ற இடங்களில் இடம் ஒதுக்கப்படும்.

டாம்கோ மூலம் இஸ்லாமியா்கள் தொழில் தொடங்க கடன் பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு தோல் தொழில்நுட்ப கல்லூரி அல்லது பயிற்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் கூறினாா்.

திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் நசீா் அஹமத், முன்னாள் எம்எல்ஏ ஹெச். அப்துல் பாசித், விசிக மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம், நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் உடனிருந்தனா்.