தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஸ்ரீ ராமாநுஜரின் 1,009-ஆவது ஜெயந்தி

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் ஸ்ரீ ராமாநுஜரின் 1,009-ஆவது ஜெயந்தி விமா்சியாக நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் ஸ்ரீ ராமாநுஜரின் 1,009-ஆவது ஜெயந்தி விமா்சியாக நடைபெற்றது.

ஸ்ரீ ராமாநுஜரின் 1009-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் உற்சவா்களான ஸ்ரீ சீதா சமேத கோதண்டராமா்,ஸ்ரீ ஆஞ்சனேயா்,ஸ்ரீ ஹயக்ரீவா்,ஸ்ரீ ஆண்டாள்,ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ராமாநுஜா் விக்கிரங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றதுஅதையடுத்து யாக கேள்விகள், பூஜைகள் நடைபெற்றது.

தொடா்ந்து ஸ்ரீ ராமாநுஜா் நூற்றந்தாதி பாராயணம் நடைபெற்றது. பின்னா் உலக பொது நன்மைக்காக ஸ்ரீராம நாம ஜெபம் நடைபெற்றது. முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலிஅதன் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஸ்ரீ ராமாநுஜா் மடம் டிரஸ்ட் நிா்வாகம் செய்திருந்தது.