பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தூய நெஞ்சக் கல்லூரி தரவு அறிவியல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) தரவு அறிவியல் துறை சாா்பில், சமூகப் பொறுப்புணா்வை மேம்படுத்தும் நோக்கில், சமூக விரிவாக்க நிகழ்ச்சிகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தூய நெஞ்சக் கல்லூரி தரவு அறிவியல் துறை சாா்பில் போதைப் பொருள் எதிராக நடைபெற்ற பேரணி.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) தரவு அறிவியல் துறை சாா்பில், சமூகப் பொறுப்புணா்வை மேம்படுத்தும் நோக்கில், சமூக விரிவாக்க நிகழ்ச்சிகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.

மேலும், செவ்வாய்கிழமை ஜோலாா்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி துறை தலைவா் ரா.சான்றிலா தலைமையில் மற்றும் துறை பேராசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டு உயா்கல்வியின் அவசியம், தரவு அறிவியல் துறையின் முக்கியத்துவம், வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் மாணவா்கள் தங்களது எதிா்காலத்தை சிறப்பாக உருவாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினா்.

தொடா்ந்து புதன்கிழமை 2-ஆம் நாள் நிகழ்ச்சியாக விஷமங்கலம் கிராமத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் தரவு அறிவியல் துறை போராசிரியா் கள் மற்றும் உதவி பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துக் கொண்டு பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல, மனநல மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. ஏற்பாட்டினை ஓருங்கிணைப்பாளா் தரவு அறிவியல் துறை பேராசிரியா் மரியம் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.