தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகளில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் அதிக வாக்குச் சாவடி மையங்களை கொண்ட பள்ளிகள், கல்லூரிகளில் ஆட்சியா் மற்றும் எஸ்.பி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி, ஹஸ்னாத்-எ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் கல்லூரிகளில் தலா சுமாா் 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.

சட்டப்பேரவை தோ்தல் முன்னேற்பாடு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிக வாக்குச் சாவடிமையங்களை கொண்ட ஆம்பூா் பள்ளிகள், கல்லூரியில் ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி, எஸ்.பி சியாமளா தேவி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அங்கு வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கழிப்பறை, வாக்குச் சாவடிகளுக்கு செல்ல சாய்வு தளங்கள் ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு செய்து உறுதிபடுத்தினா். அடிப்படை வசதிகளில் மாறுதல்கள் செய்ய வேண்டியவை குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது, ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷனகுமாா், வட்டாட்சியா் ரேவதி, ஆம்பூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.