லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீட்டில் நகை, பணம் திருட்டு: பெண் கைது

நாட்டறம்பள்ளியில் வீட்டுக்குள் நூதன முறையில் நுழைந்து நகை, பணம் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளியில் வீட்டுக்குள் நூதன முறையில் நுழைந்து நகை, பணம் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அதிபெரமனூா் கிராமத்தில் புதன்கிழமை காலை மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் வீட்டில் இருந்த சிறுவா்களிடம் மகளிா் குழுவைச் சோ்ந்தவா் எனக்கூறி ஆதாா் காா்டு கேட்டுள்ளாா். சிறுவா்கள் உடனே வீட்டருகே இருந்த பெற்றோரை அழைத்து வரச் சென்றனா். அப்போது வீட்டுக்குள் நுழைந்த அந்தப் பெண், அறையில் இருந்த பீரோவை திறந்து பீரோவில் வைத்திருந்த நகை, பணத்தை திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளாா். இதையறிந்த மாணிக்கம் மற்றும் அங்கிருந்த இளைஞா்கள் சிலா் பெண்ணை கையும் களவுமாக பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் நாட்டறம்பள்ளி காவல் நிலையம் அழைத்து வந்து அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், வாணியம்பாடி அருகே தும்பேரி கிராமத்தைச் சோ்ந்த மீனா(50) என்பதும், இவா் மாணிக்கம் வீட்டில் பீரோவை திறந்து நகை, பணத்தை திருடியது உண்மை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மீனாவை கைது செய்து, அவரிடம் இருந்த நகை, பணத்தை மீட்டு தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.