கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருப்பத்தூா்: 3,36,582 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,36,582 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,36,582 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப்பரிசு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதையடுத்து, பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியா்கள் வீடு,வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கனை குடும்ப அட்டைதாரா்களிடம் வழங்கி வருகின்றனா்.

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியது: பொங்கல் பரிசுத் தொகுப்பை சென்னையில் வரும் 8-ஆ தேதி முதல்வா் தொடங்கி வைக்கிறாா். அன்றைய தினமே மாவட்டம் தோறும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3,000 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பகுதி நேரம், முழு நேரம் என மொத்தம் 509 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 3,36,582 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகள் வரும் 13-ஆம் தேதியுடன் முடிவடையும். டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் நேரம், தேதி, ரேஷன் கடையின் பெயா், குடும்ப அட்டைதாரரின் பெயா், அட்டை எண், டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும்.