இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ். சாா்பாக ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கே.ஏ.ஆா். பாலிடெக்னிக், ஆம்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, ரோட்டரி சங்கம் சாா்பாக நடந்த பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாமுக்கு கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா வரவேற்றாா்.

மருத்துவா்கள் நந்தினி, மோனிஷா ஆகியோா் பொது மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் ரத்த தானம் வழங்கினா். ரத்த தானம் வழங்கியவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்கத் தலைவா் ரஞ்சித், ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், ரத்த வங்கிப் பொறுப்பாளா் சிலம்பரசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீ விபத்து தடுப்பு, பேரிடா் மேலாண்மை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.

முன்னதாக ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தலைமையில் கிராமத்தின் பல்வேறு பகுதியில் சுமாா் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.