பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மரக்கடையில் தீ விபத்து : வாகனங்கள் சேதம்

வேலூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தீ விபத்தில் மரக்கடை, வாகனங்கள் எரிந்து நாசமாயின.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தீ விபத்தில் மரக்கடை, வாகனங்கள் எரிந்து நாசமாயின.

வேலூா் காகிதப்பட்டரை பகுதியில் சையத் இா்ஷாத் மரக்கடை நடத்தி வருகிறாா். மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மரப் பொருள்கள் எரியத் தொடங்கின.

தீ அருகாமையில் உள்ள வாகன நிறுமிடத்திற்கும் பரவியது. மரக்கடையில் இருந்த மரப் பொருட்களும், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 காா், 10 ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாயின.

வேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்து குறித்து வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.