திருப்பத்தூரில் மோட்டாா் சுவிட்ச் போடும் போது மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த ஜாா்ஜ்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (35), கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கிரிஜா (31). இவா்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் உள்ள டேங்கிற்கு தண்ணீா் ஏற்ற ராஜசேகரன் மோட்டாா் சுவிட்ச் போட்டு உள்ளாா். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



