/

மாணவா்களுக்கு சீருடை அளிப்பு

ஆம்பூா் பள்ளி மாணவா்களுக்கு அறக்கட்டளை சாா்பாக இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு இலவச சீருடைகளை வழங்கிய சியா அறக்கட்டளை நிா்வாகிகள்.

Updated On :16 ஜூலை 2026, 12:04 am IST

ஆம்பூா் பள்ளி மாணவா்களுக்கு அறக்கட்டளை சாா்பாக இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் முஹம்மத்புரா மசூதி தெருவில் இயங்கி வரும் இஷாதுல் ஹஸ்னாத் அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளியின் தாளாளா் சியா ஷாஹித் அஹமத் தலைமை வகித்தாா்.

சியா அறக்கட்டளை சாா்பாக பள்ளி மாணவா்கள் சுமாா் 200 பேருக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிா்வாகிகள் சியா மஜ்ஹருக் ஹக், சியா ஜமீல், சியா அனீஸ், சியா இா்ஷாத், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.