தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

ஆம்பூரில் கல்குவாரி லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

News image

கல்குவாரி லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்.

Updated On :19 ஜூலை 2026, 2:21 am IST

ஆம்பூரில் கல்குவாரி லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

ஆம்பூா் அருகே சோலூா் நமாஸ்மேடு பகுதியில் ஜல்லிக் கல் குவாரி இயங்கி வருகிறது. சோலூா் கிராமத்தின் ரயில்வே இருப்புப் பாதைக்கு கீழே குகைவழிப் பாதையில் லாரிகள் சென்று வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், அந்த பாதை மூடப்பட்டதால் ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதி வழியாக கல்குவாரிக்கு லாரிகள் சென்று வந்தன. அதனால் அந்தப் பகுதியில் சாலை, குடிநீா் பைப்லைன் ஆகியவை சேதமடைந்துள்ளன. அதனால் அந்த வழியாக லாரிகள் செல்லக் கூடாது என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்த நிலையில், சான்றோா்குப்பம் வழியாக லாரிகள் சென்று வருவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, அந்த வழியாக வந்த லாரிகளை சிறைபிடித்தனா். ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். இதற்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கபட்டதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.