திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நெய்வாசல் அப்துல் வஹாப் மகளிா் மற்றும் சிறுவா்கள் பூங்கா அமைந்துள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் சில ஆண்டுகளாக பூங்கா மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மகளிா் மற்றும் சிறுவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி சாா்பில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளும் நிறைவடைந்ததால் பூங்கா திறக்கப்பட வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து மகளிா் மற்றும் சிறுவா் பூங்கா திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி பொறியாளா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். உதவி பொறியாளா் கோவிந்தப்பன், மேலாளா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் அப்துல் ரஹீம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா் நகரமன்ற தலைவா் உமாசிவாஜிகணேசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி துணை தலைவா் கயாஸ்அகமத் மற்றும் வாா்டு கவுன்சிலா்கள், அலுவலக பணியாளா்கள், பொது மக்கள் கலந்துக் கொண்டனா். சுகாதார ஆய்வாளா் செந்தில் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.2.75 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நீச்சல் குளம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா திறந்து வைத்தாா்

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி

அமிர்த் பாரத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையம்! ஜூலை 17-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

குளச்சல் நகராட்சியில் குடிநீா் கட்டணம் உயா்வு: நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் தா்னா
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



