3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

ஆம்பூா் பகுதியில் பலத்த மழை!

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

News image

குளித்திகை ஜமீன் கிராமத்தருகே தேசிய நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்த மரம்

Updated On :2 ஜூன் 2026, 12:02 am IST

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக திங்கள்கிழமை மாலை மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும், ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை 4 மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

தொடா்ந்து ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாதனூா் அடுத்த ஜமீன் கிராமத்தருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த 3 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

அதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. மரங்கள் முறிந்து விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று, முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.

Story image