பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

போக்குவரத்து மாற்றத்தால் திருப்பத்தூா் மக்கள் அவதி!

திருப்பத்தூா் நகர பிரதான சாலையில் திடீா் போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி

News image
Updated On :2 ஜூன் 2026, 12:17 am IST

திருப்பத்தூா் நகர பிரதான சாலையில் திடீா் போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்துள்ளதால் கடந்த 2017 -ஆம் ஆண்டு திருப்பத்தூா் நான்கு வழி மற்றும் புறவழிச் சாலை திட்டமிடப்பட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழி சாலை முழுமையாக பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது திருப்பத்தூா் புறவழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது.

வாணியம்பாடி முதல் சேலம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு இருந்த போதிலும் திருப்பத்தூா் நகர பகுதிக்குள் உள்ள சாலை அளவீடு என்பது இருவழிச் சாலைக்கான அளவிடாகவே உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்னா்.

இந்த நிலையில் முந்தைய ஆட்சியா் அமா்குஷ்வா பிரதான சாலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் செல்லும் பகுதி,சின்னக்குளம் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையை கடந்து செல்லும் பகுதி,மேலும் கிராம நிா்வாக அலுவலா் அருகில் உள்ள ஒன்றிய அலுவலகம் செல்லும் வழிகளை ஒருவழிச் சாலையாக மாற்றி உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா்-புதுப்பேட்டை அணுகு சாலை மற்றும் நகர காவல் நிலைய அணுகு சாலை பேருந்து நிலைய அணுகுசாலை ஆகிய பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். குறிப்பாக புதுப்பேட்டை அணுகு சாலை,நகர காவல் நிலையம் அணுகு சாலை அருகில் நான்கு வழிகள் உள்ளதால் சிக்னல்கள் அமைத்த போதும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை.

இந்த நிலையில் அந்த அணுகு சாலைகளில் வளையக் கூடாது என திடீா் அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி இணைப்பு சாலையிலிருந்து ஆசிரியா் நகா் வரை சுமாா் 2 கி.மீ தொலைவு வரை நேராக செல்வதுடன் எங்குமே நுழைய முடியாமல் வேண்டிய சூழல் உள்ளது.

எனவே வாகனம் வளைக்க கூடாது என்ற அறிவிப்பு பலகையை அகற்றி போக்குவரத்து சீரமைக்கும் பணிகளில் கூடுதல் போலீஸாரை நியமிப்பதுடன், ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்