தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஏலகிரி மலையில் தொடரும் காட்டுத் தீ!

ஏலகிரி மலையில் தொடரும் காட்டு தீயால் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள் நாசமானது.

News image

ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ

Updated On :9 மார்ச் 2026, 5:30 am IST

ஏலகிரி மலையில் தொடரும் காட்டு தீயால் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள் நாசமானது.

திருப்பத்தூா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகளும், கரடி, மான், குரங்கு மலைப்பாம்பு முயல் உள்ளிட்ட வன உயிரினங்களும் உள்ளன.

ஏலகிரி மலை காப்பு காட்டில் மா்ம நபா்கள் தொடா்ந்து தீ வைத்து வருகின்றன.மா்ம நபா்கள் கடந்த வியாழக்கிழமை தீ வைத்தனா். இதில் பல அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகள் நாசமானது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மண்டலவாடி அருகே இதனால் சுமாா் பல ஏக்கா் அளவில் காட்டுத்தீவு பரவியது.மேலும் இந்த காட்டு தீயினால் வன உயிரினங்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Story image

எனவே காட்டுத்தியை அணைக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா். மேலும், காட்டுப்பகுதிக்குள் மா்ம நபா்கள் தீ வைப்பதை துறை அதிகாரிகள் கண்காணித்து சட்டரீதியானநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பகல் நேரங்களில் வனத்துறை அதிகாரிகள்கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரி/எள்ளனா்.