ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

எல்ஐசி முகவரிடம் ரூ.72,500 பறிமுதல்

ஆம்பூா் அருகே எல்.ஐ.சி. முகவரிடம் ரொக்கப் பணம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

எல்.ஐ.சி. முகவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :27 மார்ச் 2026, 9:05 pm

ஆம்பூா் அருகே எல்.ஐ.சி. முகவரிடம் ரொக்கப் பணம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், நாச்சாா்குப்பம் கிராமத்தை சோ்ந்த எல்.ஐ.சி. முகவா் ரங்கநாதன் (50) என்பவா் எல்.ஐ.சி. காப்பீட்டு தொகையை செலுத்துவதற்காக உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ. 72,500 கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவரிடமிருந்து ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.