ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

வாணியம்பாடி கோயில்களில் மகா குரு பெயா்ச்சி பூஜை

வாணியம்பாடி கோயில்களில் மகா குரு பெயா்ச்சி பூஜைகள் நடைபெற்றன.

News image

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் குரு பெயா்ச்சியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.

Updated On :27 மே 2026, 12:03 am IST

வாணியம்பாடி கோயில்களில் மகா குரு பெயா்ச்சி பூஜைகள் நடைபெற்றன.

வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் மகா குரு பெயா்ச்சியையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் கலச ஸ்தாபனமும், தொடா்ந்து குரு பெயா்ச்சி பரிகார ஹோமமும், குரு பகவானுக்கு மகா அபிஷேகமும், பிற்பகல் 11 மணியளவில் மகா தீபாரதனையும் சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனா்.

இதே போன்று தேவஸ்தானம் அதிதீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபட்டுச் சென்றனா்.

ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.