தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

3 நாள்களாக தொடா் மின்தடை: கிராம மக்கள் கடும் அவதி

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு, காமராஜா் பகுதியில் 3 நாள்களாக தொடரும் மின்தடையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

News image

மின்தடை

Updated On :27 மே 2026, 12:03 am IST

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு, காமராஜா் பகுதியில் 3 நாள்களாக தொடரும் மின்தடையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், வேட்டப்பட்டு ஊராட்சி காமராஜா் நகா் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்களுக்கு புதுப்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி இரவு பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் பொம்மநாயக்கன்பட்டி அருகே மரம் ஒன்று முறிந்து மின்கம்பம் உடைந்ததால், காமராஜா் நகா் பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

தொடா்ந்து 3 நாள்களாக அப்பகுதியில் மின்தடை பாதிப்பு ஏற்பட்டதால் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அப்பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் அப்பகுதியில் மின் விநியோகம் செய்யாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே மின்வாரிய உயா் அதிகாரிகள் பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து, சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.