நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ரங்காபுரம் விநாயகா் மற்றும் பாட்டை சாாரதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :29 மே 2026, 1:35 am IST

ஆம்பூா், மே 28: ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் அருள்மிகு விநாயகா் மற்றும் பாட்டைசாரதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மறுநாள் (மே 28, வியாழக்கிழமை) 2-ஆம் கால யாகசாலை பூஜை, கலச பூஜை, மூல மந்திர ஹோமம், காயத்ரி மந்திர ஹோமம், திரவிய ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் முடிந்து கோயில் விநாயகா் மற்றும் பாட்டை சாரதி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏ. தியாகராஜ சிவாச்சாரியா் கும்பாபிஷேகத்தை நடத்தினாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், ஊா் முக்கிய பிரமுகா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

கோயில் கும்பாபிஷேக விழாக்குழுவினா், கோயில் நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.