நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

சுங்கத்துறை கட்டுப்பாட்டு கிடங்கு அமைக்க கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் சுங்கத்துறை கட்டுப்பாட்டு கிடங்கு அமைக்க வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினா் எல்.கே. சுதீஷ் தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் பேசிய எல்.கே. சுதீஷ் எம்.பி.

Published On :3 செப்டம்பர் 2026, 5:06 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் சுங்கத்துறை கட்டுப்பாட்டு கிடங்கு அமைக்க வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினா் எல்.கே. சுதீஷ் புதன்கிழமை தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாரை சந்தித்து தொகுதி நிதியை ஒதுக்குவது சம்பந்தமாக ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக எம்.பி. நிதியில் இருந்து ஆம்பூரில் மேல்நிலை நீா் தேக்க தொட்டி, பள்ளி சுற்றுச்சுவா், பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சுங்கத்துறை கட்டுப்பாட்டு கிடங்கு கட்ட வேண்டும். ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி அளவில் தோல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுங்கத்துறை அலுவலகம் இருந்தால் விமான நிலையம் அல்லது துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.

நான் பதவியேற்ற உடனே முதன்முதலாக பேசியதே காவிரி தண்ணீா் கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க தொழிற்சாலை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

குறிப்பாக திருப்பத்தூா் மாவட்டத்தில் சிப்காட் அமைக்கவும், வேலைவாய்ப்பு அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.