புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

விவசாயி வீட்டில் ரூ. 11 லட்சம் திருட்டு

திருப்பத்தூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.11 லட்சத்தை திருடிச் சென்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :

திருப்பத்தூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.11 லட்சத்தை திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் அடுத்த கொடுமாம்பள்ளி ஆண்டி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (43), விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவா்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனா். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த வாரம் பெருமாள் தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடனாக பெற்றாராம். அந்த பணத்தில் ரூ.4 லட்சத்தை எடுத்து சில்லறை கடன்களை அடைத்து உள்ளாா். அதே நேரம் மீதமிருந்த ரூ.11 லட்சத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளாா்.

இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு பெருமாள் தனது குடும்பத்துடன் புதுா்நாடு மலையில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தாா். அப்போது மா்ம நபா்கள் பெருமாள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.11 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனா். மறுநாள் பெருமாள் குடும்பத்தினா் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெருமாள் உடனடியாக திருப்பத்தூா் தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தினா்.

மேலும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.