ரூ.15 லட்சம் செலவில் சாலை மற்றும் குடிநீர் பணிகளை மேற்கொள்ள பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவர் அம்மு மாதவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சூரியநாராயண மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ராமஞ்சேரி, சித்தம்பாக்கம் காலனி, போந்தவாக்கம் ஊராட்சிகளில் ரூ.6 லட்சம் செலவில் சிறுமின்விசை மோட்டார் பம்பு அமைக்க வேண்டும்.
திருப்பேர் ஊராட்சி பங்காரம்பேட்டை ராமர் கோயில் தெரு, மெய்யூர் ஊராட்சி ராஜபாளையத்தில் சுடுகாடு சாலைளை ரூ.9 லட்சத்தில் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமஞ்சேரி ஊராட்சித் தலைவர் மாதவன், மாவட்டக் கவுன்சிலர்கள் வெங்கட்ரமணா, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.