பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பசுந்தீவனம் சாகுபடிக்கு மானியம்: ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், பசுந்தீவனம் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரி

Updated On :13 மே 2013, 12:32 am IST

திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், பசுந்தீவனம் சாகுபடி செய்ய அரசு மானியம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மாநிலத் தீவன விரைவு அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், தீவனப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டிலும் பசுந்தீவனம் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த மானியத்தை பெற விரும்பும் விவசாயிகள், தங்களின் அருகே உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.