ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

குப்பையில் தயாரித்த உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம்

திருவள்ளூர் நகராட்சியில் குப்பைகளில் தயார் செய்த 17 டன் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன.

News image
Updated On :8 ஜூன் 2018, 2:49 am IST

திருவள்ளூர் நகராட்சியில் குப்பைகளில் தயார் செய்த 17 டன் உரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27-வார்டுகளில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள் நாள்தோறும் 29 டன் வரை சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்க ரூ.5 கோடிசெலவில் நுங்கம்பாக்கம் கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பைகளை தரம் பிரித்து உரங்கள் தயார் செய்யப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் செந்தில்குமார், சுகாதாரப் பிரிவு அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளை வரவழைத்து 17 டன் குப்பைகளை வழங்கினர். இதுபோன்று தொடர்ந்து இங்கு தயாராகும் உரங்களை விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.