தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

ரூ.10 லட்சம் மதிப்புள்ள "குட்கா' போதைப் பொருள்கள் பறிமுதல் 

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியார் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருள்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். 

Updated On :8 ஜூன் 2018, 12:36 am IST

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியார் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருள்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். 
மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான கிடங்கு ஒன்றில் குட்கா புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அவை அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு ரகசியமாக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீஞ்சூர் போலீஸார் தனியாருக்கு சொந்தமான அந்த கிடங்கினை சோதனை செய்தனர். 
அப்போது அங்கு 70 மூட்டைகளில் குட்கா புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.10லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து, போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார், அதனை பதுக்கி வைத்திருந்த கிடங்கின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.