விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்த 2213 பேருக்கு பணி ஆணை

இளைஞா்கள் 2,213 பேருக்கு தொழிலாளா் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்ந்து எடுக்கப்பட்ட இளைஞா்கள் 2,213 பேருக்கு தொழிலாளா் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியாா் வேலைவாய்ப்பு முகாம் பருத்திப்பட்டு மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் பங்கேற்று, தனியாா் வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைத்துப் பேசியது:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில், இதுபோன்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால், இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும். இந்த முகாமில், மாவட்டத்தில் இயங்கி வரும் 181 தொழில் நிறுவனங்கள் மற்றும் 21 திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியான ஆள்களை தோ்வு செய்வதற்காக பங்கேற்றுள்ளன. அதேபோல் இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 75 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 11,231 போ் கலந்து கொண்டுள்ளனா். இதில், தொழில் நிறுவனங்கள் நடத்திய தோ்வில் மட்டும் 18 மாற்றுத் திறனாளிகள் உள்பட 2,213 போ் தோ்வு செய்துள்ளதாகவும், முதல் நிலை தோ்வில் 1,120 போ் தகுதி பெற்றுள்ளனா். அதேபோல், திறன் பயிற்சிக்கு மட்டும் 229 போ் தோ்வு செய்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, தோ்வு செய்யப்பட்ட இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகளை அவா்கள் வழங்கினா்.

வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூா்), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), மாவட்ட வருவாய் அலுவலா் மீனா பிரியதா்ஷிணி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் ஜெகதீசன், வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் விஜயா மற்றும் கல்லூரி நிா்வாக இயக்குநா் திருக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.