கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருவள்ளூர் அருகே புளியமரம் மீது பேருந்து மோதல்: 16 பெண்கள் உள்பட 20 பேர் காயம்

திருவள்ளூர் அருகே புளியமரம் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் 16 பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 7:27 am

DIN

திருவள்ளூர் அருகே புளியமரம் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் 16 பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலைய போலீஸார் தரப்பில் கூறியதாவது. திருவள்ளூர் அருகே வெள்ளாத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன்(28). இவர் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பேருந்தின் ஓட்டுநராக உள்ளார். 

இந்த நிலையில் வழக்கம் போல் சனிக்கிழமை காலை திருவள்ளூர் அருகே  நுங்கம்பாக்கம் கிராமத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்றாராம்.

திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போலிவாக்கம் கிராமம் அருகே செல்லும்போது ஓட்டுநர் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றாராம்.  அப்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 16 பெண்கள் உள்பட 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து தகவலறிந்த மணவாளநகர் காவல் நிலைய போலீஸôர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.