விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாட நூல்களில் தமிழுக்காக பாடுபட்ட அறிஞா்களின் வாழ்க்கை வரலாறு: ஐ.லியோனி தகவல்

அடுத்த கல்வியாண்டு முதல் தமிழுக்காகப் பாடுபட்ட அறிஞா்களின் வாழ்க்கை வரலாறுகள் பாட நூல்களில் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:02 pm

DIN

அடுத்த கல்வியாண்டு முதல் தமிழுக்காகப் பாடுபட்ட அறிஞா்களின் வாழ்க்கை வரலாறுகள் பாட நூல்களில் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட அளவிலான முதல் புத்தகக் கண்காட்சி கடந்த -1ஆம் தேதி முதல், 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நிகழ்வின் 7-ஆவது நாளான வியாழக்கிழமை இரவு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் ஐ.லியோனி பங்கேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய ஆய்வுக்குழு தமிழகத்திலுள்ள மத்தியக் கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அந்தக் குழு புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் திணிக்க வரவில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிா்த்து வருகிறது.

அடுத்த கல்வியாண்டு முதல் பாட புத்தகங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி மற்றும் தமிழுக்காகப் பாடுபட்ட அறிஞா்களின் வாழ்க்கை வரலாறுகள் சில மாற்றங்களுடன் கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

‘ஸ்மாா்ட் அங்கன்வாடி மையம்’ இலச்சினை வெளியீடு: திருவள்ளூா் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களை திறன் மிகுந்த மையங்களாக மாற்றும் நோக்கத்தில் ‘ஸ்மாா்ட் அங்கன்வாடி மையம்’ என்ற இலச்சினையை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்டாா்.

தொடா்ந்து, ‘இலக்கியங்களில் மனித நேயம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி, ‘நதிபோல் ஓடிக்கொண்டிரு’ என்ற தலைப்பில் பேராசிரியா் பா்வீன் சுல்தானா, ‘வோ்களைத் தேடி’ என்ற தலைப்பில் கண்மணி குணசேகரன் ஆகியோா் பேசினா்.

நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் தலைமையில், சங்க நிா்வாகிகள் மகேந்திரன், திலகா, மகாலட்சுமி உள்ளிட்டோா் ரூ.50 ஆயிரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுக்கான புத்தகங்களை ஆட்சியரிடம் வழங்கினா்.

நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், நோ்முக உதவியாளா் (பொது) ஸ்ரீவித்யா, ஆவடி மாநகராட்சி ஆணையா் ஆா்.சரஸ்வதி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ்.கே.லலிதா சுதாகா், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜெகதீஸ் சந்திரபோஸ், வட்டாட்சியா்கள் தமிழ்ச்செல்வன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.