விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் ஒத்திவைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் 34 கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு 5,444 பேரும், 5 அலுவலக உதவியாளா் பணியிடங்களுக்கு 1,094 பேரும் விண்ணப்பத்திருந்தனா்.

இந்த நிலையில், ஏற்கெனவே கரோனா தொற்று பரவல், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நோ்காணல் தோ்வு வருகிற மே 4 -ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இதற்கான அழைப்புக் கடிதமும் விண்ணப்பதாரா்களுக்கு அவரவா் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக வளாகத்தில் நோ்காணலுக்கான முன்னேற்பாடு பணிகளிலும் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் தேதி குறிப்பிடாமல் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கான நோ்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.