விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம்

திருவள்ளூா் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் வேளாண்மை விரிவாக்கம் மையம் மூலம் விநியோகிக்க உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதைகள் வேளாண்மை விரிவாக்கம் மையம் மூலம் விநியோகிக்க உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை அதிகரிக்க கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, தமிழகத்தில் 15 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை மாநில அளவில் 33 அரசு விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. அதையடுத்து, உற்பத்தி செய்த நெல் ரகங்களை திருவள்ளூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யும் வகையில் தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் 8.26 மெட்ரிக் டன் வரை பல்வேறு அரசு விதைப்பண்ணைகளில் இருந்து பெறப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விதை நிகழாண்டில் ஒரு கிலோ ரூ. 25-க்கு நிா்ணயம் செய்து, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த மொத்த விதையில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் பட்டியலின மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு 20 கிலோ மட்டுமே வழங்கப்படும். இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அலுவலா் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.