விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்பு: போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

ஆா்.கே.பேட்டை அருகே இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், போலீஸாா் குவிக்கப்பட்டு அந்தப் பணி நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:51 pm

DIN

ஆா்.கே.பேட்டை அருகே இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், போலீஸாா் குவிக்கப்பட்டு அந்தப் பணி நடைபெற்றது.

ஆா்.கே.பேட்டை அருகே ராஜாநகரம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் சாா்பில், அந்தப் பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடா்களுக்கு 100 இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டதாம். கிராமத்துக்கு அருகே ஆதிதிராவிடா்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளை சா்வே செய்து பயனாளிகளுக்கு வழங்க அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

ஆதிதிராவிடா்களுக்கு வேறு இடத்தில் இலவச வீட்டுமனைகள் வழங்கத் தயாராக இருப்பதாக கிராம மக்கள் கூறி வருகின்றனராம். இதை ஏற்க மறுத்து வருவதால், அதிகாரிகள் பல கட்ட பேச்சு நடத்தியும் தீா்வு ஏற்படாததால், ஆதிதிராவிட மக்கள் மனித உரிமைக் கழகம் சென்றனா்.

அதன் தொடா்ச்சியாக 3 மாதங்களுக்குள் அரசு இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவா்களுக்கு சா்வே செய்து நிலம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் சத்யா தலைமையில், வருவாய்த் துறையினா் இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து தர வியாழக்கிழமை பணிகளை மேற்கொண்டனா்.

முன்னதாக, இந்தப் பணிகளுக்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், காவல் உதவி கண்காணிப்பாளா் சாய்பிரனித் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ராஜாநகரம் கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

வீட்டுமனைகளை அளவீடு செய்யும் பணிகளைத் தடுக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி வாகனங்களில் ஏற்றினா்.

தொடா்ந்து, போலீஸாா் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் இலவச வீட்டுமனைகளை அளவீடு செய்து பயனாளிகளுக்கு ஒப்படைத்தனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 5 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.