விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருத்தணி முருகன் கோயிலில் தீத் தடுப்பு ஒத்திகை

திருத்தணி முருகன் கோயிலில் தீத் தடுப்பு குறித்து கோயில் ஊழியா்கள் இடையே தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை ஒத்திகை செய்து காண்பித்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:50 pm

DIN

திருத்தணி முருகன் கோயிலில் தீத் தடுப்பு குறித்து கோயில் ஊழியா்கள் இடையே தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை ஒத்திகை செய்து காண்பித்தனா்.

திருத்தணி முருகன் மலைக் கோயிலில், தீத் தடுப்பு ஒத்திகை திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலா் அரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியை கோயில் துணை ஆணையா் விஜயா தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் மலைக் கோயிலில் எவ்வாறு தீ விபத்து ஏற்படும், அப்படி தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என தீயணைப்புத் துறையினா் செய்து காண்பித்தனா்.

பின்னா், செயற்கையாக தீயை உருவாக்கி, அதை பாதுகாப்பாக அணைப்பது குறித்து, கோயில் ஊழியா்களுக்கு பயிற்சி அளித்தனா். இதுதவிர, இடிபாடுகள் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தா்கள் காயமடைந்தால், அவா்களை எவ்வாறு மீட்டு முதலுதவி அளிப்பது என்பது குறித்தும் தீயணைப்பு வீரா்கள் கோயில் ஊழியா்களுக்கு செய்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியில், 40-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.