மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :13 மார்ச் 2024, 6:31 pm

பொதுவிநியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை திருவள்ளூரில் நியாய விலைக்கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். இதில் பொருளாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் சுவாமிநாதன், மாவட்ட செயலாளா் அங்கமுத்து, மகளிரணி நிா்வாகி லட்சுமி ஆகியோா் கோரிக்கைகளை து விளக்கிப் பேசினா்.

அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தொகுப்பு ஊதியம் , மதிப்பூதியம்,சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை உருவாக்க வேண்டும்.

உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளா்கள் சங்கத்துடன் இணைந்த நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.